தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, கூவத்தூர் பேரம் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார்.
ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், தீர்மானத்திற்கு அனுமதி வழங்க சபாநாயகர் தனபால் மறுத்தார். இதனால், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சபையை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். அமளி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டசபை கூட்டம் துவங்கியது. அப்போது, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்துநின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.