சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்!

Chennai Women Murder: சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Sep 19, 2024, 11:05 AM IST
  • இளம் பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.
  • உடலை குடோனில் அடைத்து வீசியுள்ளனர்.
  • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்! title=

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்த கரைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது, இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரத்த கரைகளுடன் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | திமுக முப்பெரும் விழாவில் மு.கருணாநிதி உரை... ஏஐ மூலம் நடந்த அற்புதம்

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சென்னை மணலி பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் திருமணம் ஆகாதவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்டு இருக்கும் உடல் தீபா என்பதும் போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.

பாலியல் தொழில் செய்து வரும் தீபாவை ஏஜென்ட் ஒருவர் தொடர்பு கொண்டு துரைப்பாக்கத்திற்கு அழைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தீபாவை அழைத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீபா எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்த நபர்கள் தீபாவின் உடலை சூட்கேஸில் அடைத்து போட்டுச் சென்றது குறித்தும் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தீபா காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது தீபாவை துரைப்பாக்கத்திற்கு வரவைத்து கொலை செய்தது குறித்து காரணங்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தீபாவை சுத்தியல் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் திமுக உயர்ந்து நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News