அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வருடன் நேற்று அந்த கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களது கோரிக்கைகளை குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் செய்யவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.