பக்கோடா விற்பது கூட பட்டதாரிகளுக்கான ஒரு வேலை வாய்ப்பு தான் என பிரதமா் மோடி கூறியதைத் அடுத்து புதுவை முதல்வர் நாராயண சாமி பக்கோடா விற்கும் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!
புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று தெரிவித்துள்ளதன் படி விரைவில் புதுச்சேரி அரசு "தகவல் தொழில்நுட்ப பூங்கா" (IT Park) ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று இந்த விளையாடிற்கு முற்று உள்ளி வைக்க 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பசு, காளை, கன்று, ஒட்டகம் இறைச்சி விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதங்கள் நடைபெற்றன.
அப்பொழுது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு தடை விதித்ததை புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். யார் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. நாடு முழுவதும் 40 சதவீத மக்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைப்பெற்று வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி தங்களது அதிகாரங்களை பறிக்க முயல்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்பட சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல் பிரச்சனையால் அரசு பணிகள் முடங்கின. பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் 3 நோயாளிகள் பலி
புதுச்சேரி அரசு மருத்துமனையில் ரத்தசுத்திகரிப்புச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட சுசீலா (77), அம்சா (55), கணேஷ் (54) ஆகிய மூன்று பேருக்கு இன்று சிகிச்சை நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்த சுத்திகரிப்பு நடக்கும் போது மின்சாரம் மருத்துவமனையில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புதுவையில் உள்ள தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஓன்று சேர்ந்து "போராளிகள்" குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த போராளிகள் குழுவின் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும், புதுவைக்கு வரும் பஸ்களும் வரவில்லை.
புதுவையில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 11,143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
வளமான புதுச்சேரி என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் பதவியேற்று பிறகு அனைத்துத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக புதுவையில் சிறப்பான நிர்வாகத்தை இழந்து விட்டது. மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை.
புதுவை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நாராயணசாமி முதல் முறையாக டில்லி சென்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஜூன் 22-ம் தேதி தனது அமைச்சர்களுடன் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இது குறித்து நாராயணசாமி கூறுகையில்:- புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்பதற்காகவே டில்லி செல்ல உள்ளோம். டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடி மட்டுமின்றி நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது.
அதன் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுபதி, பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தம் தொடர்பாகவும், இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்திய 10 மாவட்ட சங்கங்களுக்கு பார் கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டுள்ளார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இதனை அடுத்து புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். மு.க.ஸ்டாலின்,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ள்ட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் அவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிரண்பேடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, அவரது கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். அனைவரும் கிரண்பேடிக்கு மலர்க்கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களையும் கைப்பற்றின. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10.70 லட்சத்து மேலாக மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார்கள். 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந்தேதி வரை நடந்தது.
நடந்து முடிந்த புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களையும் கைப்பற்றின. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது.
எனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் முதல்வராக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிப்பதால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.