உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு -HD குமாரசாமி!

கர்நாடகாவின் 15 தொகுதிகளில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவுள்ளதாக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 24, 2019, 03:03 PM IST
உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு -HD குமாரசாமி! title=

கர்நாடகாவின் 15 தொகுதிகளில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவுள்ளதாக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்!

கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் காலியாக உள்ள இடங்களுக்கு உள்ளூர் வரும் அக்டோபர் 21-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியுட்டுள்ளது. இந்த தேர்தலில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தனித்து போட்டியிடும் என்றும், உள்ளூர் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கிடைக்கபெற்ற தகவல்களின்படி தேசபக்தர் தேவேகவுடா, குமாரசாமி, எச்.டி.ரெவண்ணா உள்ளிட்ட கட்சித் தலைமை, ஹாசன் தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவு வேட்பாளர் சுமலதா மற்றும் பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோருக்கு எதிராக மண்டியாவிலிருந்து நிகில் குமாரசாமியை களமிறக்கியதில் ஏராளமான குறைபாடுகளை எதிர்கொண்டது.

கடந்த வாரம், கவுடா காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பையும் நிராகரித்திருந்தார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தின் கிளர்ச்சி, 15 தொகுதிகளில்  எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தனித்து போட்டியிடும் முடிவை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடன் தேரிவித்து எச்.டி. குமாரசாமி அவர்கள்., முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொல்லை பின்பற்ற நான் கிளிப்பிள்ளை இல்லை. சித்தராமையா தனது கட்சி தலைமையினையே மதிப்பதில்லை. நான் காங்கிரஸ் தலைமையின் வாழ்த்துகளுடன் தான் முதல்வர் ஆனேன்., சித்தராமையா காங்கிரஸ் தலைமையின் பேச்சை கேட்பதில்லை. தனது மாகான பெருமைக்கா அவர் எதையும் செய்யும் துணிச்சல் கெண்டவர்" என தெரிவித்துள்ளார்.

Trending News