மபி-யில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட அவலம்!

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2018, 02:34 PM IST
மபி-யில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட அவலம்! title=

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

போபாலின் அயோத்தியா நகரில் நர்சரிங் பள்ளி ஒன்றில் பயின்று வந்த 3 வயது சிறுமியை, பள்ளி வேண் நடத்துநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். கடந்த வியாழன் அன்று நடைப்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வேன் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை, குற்றம்சாட்டப்பட்ட நடத்துநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் 17 வயது கொண்டவர் என தெரிகிறது, அவரின் வயதினை உறுதிப்படுத்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது என காவல்துறை அதிகாரி பல்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பவ நாள் அன்று பாதிக்கப்பட்ட சிறுமி 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளார், பின்னர் சிறுமியினை குளிக்க வைக்க அவரது தாயார் முற்பட்டப்போது சிறுமிக்கு சேர்ந்த அவலம் குறித்து அவரது தாயார் அறிந்துள்ளார். சிறுமியிடம் நடந்தவற்றை குறித்து கேட்டறிந்த அவரது தாயார் இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நடத்துநரின் மீது காவல்துறையினர் IPC பிரிவு 376 AB -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது!

Trending News