லக்கிம்பூர் கொலை வழக்கு: உடல்நலக் குறைவு எனக்கூறி தப்பித்த பாஜக அமைச்சரின் மகன்

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மோனு, சனிக்கிழமை ஆஜராகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2021, 04:42 PM IST
  • இன்று காலை அவர் ஆஜராகுவார் என போலீசார் காத்திருந்தனர்.
  • சட்டம் அதன் கடமையை செய்யும் என்று போலீசார் எச்சரிக்கை.
  • ஆஷிஷ் எஸ்ஐடி முன் ஆஜராகிறார். இதில் மறைக்க எதுவும் இல்லை.
லக்கிம்பூர் கொலை வழக்கு: உடல்நலக் குறைவு எனக்கூறி தப்பித்த பாஜக அமைச்சரின் மகன் title=

லக்னோ: லக்கிம்பூர் கெரியின் திக்குனியாவில் கலவரம் மற்றும் வன்முறை காரணமாக எட்டு பேர் இறந்த வழக்கில் விவசாயிகள் தாக்கல் செய்த எஃப்ஐஆரில் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா என்ற மோனு சனிக்கிழமை அன்று லக்கிம்பூர் கேரி போலீஸ் லைனில் உள்ள குற்றப்பிரிவு குழு முன் ஆஜராகிறார். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் குற்றப்பிரிவு முன்பு நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. உடல்நலக் குறைவு எனக் கூறப்பட்டு உள்ளது. 

லக்கிம்பூர் கேரி வழக்கில், மோனு என்ற ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 24 மணிநேர நீட்டிப்பு கிடைத்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், போலீசாரிடம் நேரில் ஆஜராக நேரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. லக்கிம்பூர் கெரி காவல்துறையின் குற்றப்பிரிவு குழு ஆஷிஷ் மிஸ்ரா மோனுவை சனிக்கிழமை இரவு 11:00 மணிக்கு முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. 

சட்டம் அதன் கடமையை செய்யும் - எச்சரித்த போலீஸ்:
அதேபோல மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வீட்டில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இன்று காலை அவர் ஆஜராகுவார் என போலீசார் காத்திருந்தனர். ஆனால் அவர் தரப்பில் இருந்து உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராக முடியவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. அவரது மகன் ஆஷிஷுக்கு 24 மணிநேர நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆஷிஷ் மிஸ்ரா மோனு சனிக்கிழமை அன்று நேரில் ஆஜராகவில்லை என்றால், சட்டம் அதன் கடமையை செய்யும் என்று போலீசார் தெளிவாக அறிவிப்பில் கூறியுள்ளனர்.ல்லை என்றால், சட்டம் அதன் கடமையை செய்யும் என்று போலீசார் தெளிவாக அறிவிப்பில் கூறியுள்ளனர்.

ALSO READ |  பிரியங்கா காந்தி ஒரு போராளி அவரது பாட்டியை போன்றவர்: யோகி அரசை எச்சரித்த சிவசேனா

மேலும் இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, எனது மகனை நான் எங்கும் மறைத்து வைக்கவில்லை. தனது சொந்த முடிவுகளை அவரே எடுப்பார் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

வன்முறை நடந்த இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை:
ஆஷிஷ் மிஸ்ராவின் உறவினர் அமித் மிஸ்ரா," இந்த விவகாரத்தில் இருந்து தப்பி ஓடுகிறோம் எனக்கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினார். ஆஷிஷ் எஸ்ஐடி முன் ஆஜராகிறார். இதில் மறைக்க எதுவும் இல்லை. இது காங்கிரசால் பரப்பப்பட்ட பொய் பிரச்சாரம் என்று அமித் கூறினார், 

ஆஷிஷ் அந்த நேரத்தில் பன்வீர்பூரில் இருந்தார் (சம்பவத்தின் போது), அதாவது அவர் சம்பவம் நடந்த இடத்தில் இல்லவே இல்லை என்றும், வன்முறை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆஷிஷ் தப்பிச்சென்றார் எனக்கூறும் அனைத்து விஷயங்களும் புனையப்பட்டவை என்றும் அமித் கூறினார். 

உ.பி-யில் நடந்தது கடுமையான குற்றம் தான் -உச்ச நீதிமன்றம்:
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​உ.பி. அரசின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், நாளை காலை 11 மணிக்குள் அவர் ஆஜராகவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம். 

ALSO READ |  Lakhimpur Kheri: கொல்லப்பட்ட விவசாயி உடலுக்கு நள்ளிரவில் நடந்த பிரேத பரிசோதனை

லக்கிம்பூர் கேரி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏன் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள் என்று உபி அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ​​பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டு காயம் இல்லை என்று ஹரீஷ் சால்வே கூறினார். இந்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இல்லாவிட்டாலும், அங்கு நடந்தது ஒரு கடுமையான குற்றம் தான் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்கு பதில் ஹரிஷ் சால்வே, நான் காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News