மெஹபூபா, உமர் அப்துல்லாவை விடுதலை செய்ய பிரார்த்தனை செய்யுங்கள்: ராஜ்நாத் சிங்!

ஜம்மு-காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களை வீட்டு காவலில் வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க பிரார்த்தனை செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 23, 2020, 09:39 AM IST
மெஹபூபா, உமர் அப்துல்லாவை விடுதலை செய்ய பிரார்த்தனை செய்யுங்கள்: ராஜ்நாத் சிங்! title=

ஜம்மு-காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களை வீட்டு காவலில் வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க பிரார்த்தனை செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!

டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களை தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து அவர்களை விடுவிக்க பிரார்த்தனை செய்வதாகவும், காஷ்மீரில் நிலைமையை சீராக்க அவர்கள் பங்களிப்பார்கள் என்று நம்புவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் - தேசிய மாநாட்டின் (NC) ஃபாரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) மெஹபூபா முப்தி உட்பட டஜன் கணக்கான அரசியல்வாதிகள் மோடி அரசு மறுசீரமைக்கப்பட்ட பின்னர் விரைவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன், வீட்டுக்காவலில் இருந்த தலைவர்களை படிப்படியாக காஷ்மீர் நிர்வாகம் விடுதலை செய்தது. இருப்பினும், காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உள்பட சில அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் IANS நிறுவனத்துக்கு அளித்து சிறப்பு பேட்டியில் கூறுகையில்.. "காஷ்மீர் அமைதியாக உள்ளது.  வளர்ச்சியுடன் அங்கு நிலவரம் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும். யாரையும் அரசு துன்புறுத்தவில்லை. காஷ்மீரன் நலனுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொருவரும் அதனை வரவேற்றனர். 

அப்துல்லாக்கள் மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் முன்கூட்டியே விடுதலையாக  பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் வெளியே வந்தவுடன், காஷ்மீரின் நிலவரத்தை முன்னேற்றத்தை நோக்கி உழைத்து அவர்களது பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என அவர் தெரிவித்தார். மேலும், ராஜ்நாத் சிங் காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் முந்தைய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரது நேர்மையையும் கருணையையும் பாராட்டினார். 

 

Trending News