TTD: திருப்பதி திருமலையில் தங்கும் அறை வாடகை உயர்த்தப்பட்டதா? இதோ விளக்கம்

Tirumala Tirupati Devasthanam: பக்தர்களின் நலனுக்காக அன்னபிரசாதம், லட்டு பிரசாதம், தங்குமிடம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் விரிவான விளக்கமளித்தார் திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2023, 05:50 PM IST
  • திருப்பதியில் பக்தர்களின் நலனுக்கான கருத்துக்கேட்புக் கூட்டம்
  • திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கலந்துக் கொண்டார்
  • கேள்விகளுக்கான விளக்கங்களை தந்தார் டிடிடி அதிகாரி
TTD: திருப்பதி திருமலையில் தங்கும் அறை வாடகை உயர்த்தப்பட்டதா? இதோ விளக்கம் title=

திருப்பதி: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லட்டு வழங்கும் கவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில், TTD விரைவில் கூடுதல் கவுன்டர்களை அமைக்கும் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமையா பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர டயல் யுவர் இஓ நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், லட்டு வளாகத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க 50 கவுன்டர்கள் தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. லட்டு வளாகத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க, மேலும் 30 கவுன்டர்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தெரிவித்தார்.  

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 23 அழைப்பாளர்கள் நேரடி ஃபோன்-இன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வருகை தரும் பக்தர்களின் நலனுக்காக அன்னபிரசாதம், லட்டு பிரசாதம், தங்குமிடம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு சிலர் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கியுள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த திருமதி லட்சுமி, பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ ஜெயச்சந்திரா ஆகியோருக்கு TTD EO, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதன் மூலம் அவர்களின் கருத்து மற்றும் பரிந்துரைகளின்படி தேவையான முன்னேற்றங்கள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் படிக்க | 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சாமியார்... யார் இந்த ஜலேபி 'பாபா' ?

எஸ்விபிசியில் நிகழ்ச்சிகளைப் பாராட்டிய சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமதி சுஜாதா, அலிபிரியில் உள்ள மாதிரி கோவிலில் கேமராக்கள் மற்றும் வீடியோக்கள் இல்லாததால், ஆர்ஜித சேவைகள் தொடர்பான காட்சிகளை நேரலையில் காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது ஆலோசனையை ஏற்று, சேவாக்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டு புதிய காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ பரமேஸ்வரன் என்பவர் திருப்பதி திருச்சானூர் கோவிலில் பணிபுரியும் பணியாளரின் கடுமையான நடத்தை குறித்து புகார் அளித்தார், இந்த பிரச்சினை சிசிடிவி காட்சிகள் மூலம் சரிபார்க்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு பக்தர்களிடம் அவர்களின் நடத்தை குறித்து தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் தர்மா ரெட்டி பதிலளித்தார்.  

பெங்களூரைச் சேர்ந்த யாத்ரீகர் அழைப்பாளர் ஸ்ரீ கங்காதர் என்பவரின் சந்தேகத்தை தெளிவுபடுத்திய EO, திருமலை கோயில் மூடப்பட்டது குறித்து TTD க்கு எதிரான பொய்யான மற்றும் தீவிரமான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று பக்தர்களை வலியுறுத்தினார்.

இதேபோல், திருப்பதி திருமலையில் TTD அறை கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். திருமலையில் உள்ள 7500 அறைகளில் 5000 அறைகள் ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன.  SPRH VIP பகுதியின் கீழ் வரும் 172 அறைகள் புதுப்பிக்கப்பட்டு, அந்த அறைகளின் வாடகை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பக்தர்களே அலர்ட்! திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

நாள்தோறும் திருமலையில் சுமார் 80,000 யாத்ரீகர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்கின்றனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News