என் மகளுக்காக வேண்டிக்கோங்க.. விபத்தில் சிக்கிய ரம்பா உருக்கம்!

தனது காரை மற்றொரு கார் ஒன்று மோதியதில், தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 1, 2022, 01:59 PM IST
  • ரம்பாவுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
  • மகள் மருத்துவமனையில் அனுமதி.
  • ரம்பாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
என் மகளுக்காக வேண்டிக்கோங்க.. விபத்தில் சிக்கிய ரம்பா உருக்கம்! title=

பிரபல நடிகை ரம்பா தற்போது குடும்பத்துடன் கனடா நாட்டின் தலைநகர் டொரோண்டோ வசித்து வருகிறார். அவர் 2010ஆம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

தொடர்ந்து, அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நடிகை ரம்பா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரின் கார் விபத்துக்குள்ளாகியதாக பதிவிட்டுள்ளார்.

அதில்,"குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சாலையின் ஒரு சந்திப்பில் எங்கள் காரை மற்றொரு கார் ஒன்று மோதி விபத்தானது. என்னுடன் குழந்தைகளும், குழந்தை பராமரிப்பாளரும் இருந்தார்கள். எங்கள் சிறுகாயங்கள் மட்டும் ஏற்பட்டது. எனது மகன் ஷாஷா இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெட்ட நாள்... கெட்ட நேரம்... அனைவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | காவு வாங்கிய பேலியோ டயட்?... நடிகர் பரத் கல்யாண் மனைவி மரணம்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

அவரின் பதிவை தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், அவரது மகள் நலமுடன் விரைவில் மீண்டு வருவார் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடிகை மீனாவும் தனது ஆறுதலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.  நடிகை ரம்பா தனது மகள் ஷாஷாவுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் ஒன்றை நேற்று இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதில், அவரது மகள் ஷாஷா பிரஞ்சு பாடல் ஒன்றை பாடிகிறார். தற்போதைய விபத்தை தொடர்ந்து, அந்த வீடியோவிலும் பலர் தங்களின் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

1992ஆம் ஆண்டு, மலையாளம்  திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்பா, 1993ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான 'உழவன்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, 'உள்ளத்தை அளித்தா', 'சுந்தர புருஷன்', 'அருணாச்சலம்', 'நினைத்தேன் வந்தாய்', 'காதலா காதலா', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'உன்னருகே நான் இருந்தால்', 'மின்சாரக் கண்ணா' போன்ற வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். 

திருமணத்திற்கு பின் திரைப்படங்களுக்கு விடை கொடுத்த ரம்பா, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | காந்தாரா படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News