மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?

7th Pay Commission:அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும். 

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இதற்கு முன்னர், சென்ற வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் (Cabinet Meeting) இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என கருதப்பட்ட நிலையில், அந்த கூட்டத்தில் அது அறிவிக்கப்படவில்லை. எனினும் இப்போது பண்டிகைக் காலத்தில் பணியாளர்களுக்கு பெரிய பரிசு கிடைக்கும் என கூறப்படுகின்றது. அவர்களின் அகவிலைப்படி உயர்வு மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு முன் இந்த பரிசு கிடைக்கும். 

1 /11

மத்திய அரசு ஊழியர்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் உள்ளது. அவர்களது நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. அகவிலைப்படிஅதிகரிப்பு பற்றிய ஒரு சமீபத்திய புதுப்பிப்பு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /11

ஓய்வூதியதாரர்கள்: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இதற்கு முன்னர், சென்ற வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் (Cabinet Meeting) இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என கருதப்பட்ட நிலையில், அந்த கூட்டத்தில் அது அறிவிக்கப்படவில்லை.

3 /11

அகவிலைப்படி உயர்வு: எனினும் இப்போது பண்டிகைக் காலத்தில் பணியாளர்களுக்கு பெரிய பரிசு கிடைக்கும் என கூறப்படுகின்றது. அவர்களின் அகவிலைப்படி உயர்வு மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு முன் இந்த பரிசு கிடைக்கும். 

4 /11

அமைச்சரவை கூட்டம்: 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான டிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்பு அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. தீபாவளிக்கு முன், ஊழியர்களுக்கு பண்டிகை கால பரிசாக இது வழங்கப்படும். அதிகரித்த தொகையும் அக்டோபரிலேயே வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. 

5 /11

டிஏ அரியர்: அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும். 

6 /11

7வது ஊதியக்குழு: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டியவுடன் அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால், 7வது ஊதியக்குழுவின் கீழ், டிஏ 50% -ஐத் தாண்டியவுடன் கண்டிப்பாக அதை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஆகையால், அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாமல் அப்படியே தொடரும் என்றுதான் கூறப்படுகின்றது.

7 /11

ஏஐசிபிஐ குறியீடு: ஜனவரி மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் வந்த AICPI-IW குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, ஜூலை 2024 முதல் பணியாளர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படுகிறது. ஜனவரியில், குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது. இதற்குப் பிறகு, பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும், மே மாதத்தில் 139.9 புள்ளிகளாகவும் இருந்தது. இந்த முறைப்படி, அகவிலைப்படி ஏப்ரல் மாதத்தில் 51.44 சதவீதம், 51.95 சதவீதம், 52.43 சதவீதம் மற்றும் மே மாதத்திற்குள் 52.91 சதவீதத்தை எட்டியது. ஜூன் மாதத்தில் குறியீடு 141.4 புள்ளிகளாக இருந்த நிலையில், அகவிலைப்படியின் மதிப்பெண் 53.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

8 /11

அகவிலைப்படியை எவ்வளவு அதிகரிக்கும்? ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், அகவிலைப்படி (Dearness Allowance) 3%-4% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூடியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53%-54% அதிகரிக்கும். 

9 /11

சம்பள உயர்வு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.  

10 /11

சம்பள உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.