மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

7th Pay Commission: மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜீலை மாதங்களில் இந்த திருத்தம் அமலுக்கு வருகின்றது.

7th Pay Commission: ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் டிஏ (DA) 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியையும் (Dearness Allowance) ஓய்வூதியதாரர்கள் 50% அகவிலை நிவாரணத்தையும் (Dearness Relief) பெற்று வருகிறார்கள். ஜூலையில் டிஏ 3% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

1 /9

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழுவிக்கான அறிவிப்பு வரும் என ஊழியர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், தற்போது சிறிய ஆறுதல் தரும் செய்தி ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /9

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் இது தெளிவாகியுள்ளது. ஜூன் மாதம் அகவிலைப்படி 3% உயரக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. 

3 /9

மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜீலை மாதங்களில் இந்த திருத்தம் அமலுக்கு வருகின்றது. எனினும் இதற்கான அறிவிப்பு முறையே மார்ச் மற்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வருகின்றது. தற்போது ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

4 /9

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இதன் நேரடிப் பலன் கிடைக்கும். 

5 /9

ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் டிஏ (DA) 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியையும் (Dearness Allowance) ஓய்வூதியதாரர்கள் 50% அகவிலை நிவாரணத்தையும் (Dearness Relief) பெற்று வருகிறார்கள். ஜூலையில் டிஏ 3% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும். 

6 /9

சமீபத்தில் வெளிவந்த ஜூன் மாத AICPI-IW குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, ஜூலை 2024 முதல் பணியாளர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டில் 1.5 புள்ளிகள் என்ற பெரிய ஏற்றம் காணப்பட்டுள்ளது. மே மாதத்தில் 139.9 புள்ளிகளாக இருந்தது, தற்போது 141.4 ஆக அதிகரித்துள்ளது.  

7 /9

AICPI-IW குறியீட்டு எண்களின் அடிப்படையில், அகவிலைப்படி எண் 53.36 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆகையால் மொத்த அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்துக்கான திருத்தத்தில் அகவிலைப்படியில் குறைந்தபட்சம் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்கும்.

8 /9

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.