Ajith Kumar: மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் மீண்டும் பைக் டூர் கிளம்பிய அஜித்? வைரல் புகைப்படம்..

Ajith Kumar Latest Photos : நடிகர் அஜித்குமார் மீண்டும் பைக் ரைட் செய்ய தொடங்கியுள்ளதை தொடர்ந்து, அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அஜித்தின் தற்போதைய புகைப்படத்தை ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Ajith Kumar Latest Photos : நடிகர் அஜித்குமார், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதை மறுத்த அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, அவருக்கு காதுக்கு பின்னால் உள்ள சிறிய கட்டிதான் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறினார். இதையடுத்து, அவர் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

1 /7

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகராக இருக்கும் அஜித்குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

2 /7

விடாமுயற்சி படத்தை அடுத்து, அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 

3 /7

விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு 1 வருடத்திற்கு முன்னர் வெளியான நிலையில், இது குறித்த பிற அப்டேட்டுகள் தொடர்ந்து வரவிருக்கின்றன. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.   

4 /7

நடிகர் அஜித், சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு என்னவோ ஏதோ என்று பயந்தனர். பின்பு அவர், வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனைக்கு சென்றார் என கூறப்பட்டது.

5 /7

மருத்துவமனைக்கு சென்ற இடத்தில் அஜித்திற்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் இதை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியதாகவும் கிளப்பிவிட்டனர். இந்த தகவலை, அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மறுத்ததோடு, காத்க்கு பின்னால் இருந்த கட்டியைத்தான் அவர்கள் அகற்றியதாக தெரிவித்தார். 

6 /7

அஜித், சில நாட்களில் பூரண குணம் பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், மகனுடன் அஜித் உரையாடுவது போன்ற புகைப்படத்தை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

7 /7

அஜித், தற்போது முழுமையாக குணமாகியுள்ளதை அடுத்து தற்போது மீண்டும் பைக் டூர் கிளம்பியுள்ளார். இந்த புகைப்படத்தை அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார்.