டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் சூரி! அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

'சூரியின் 'கருடன்' பட வெற்றி கூட்டணியுடன் இணைந்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். சூரியை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

 

1 /6

காமெடி நடிகராக இருந்த சூரி தற்போது ஹீரோவாக வளர்த்துள்ளார். தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து அதில் தன்னுடைய 100% உழைப்பை கொடுத்து வருகிறார்.  

2 /6

விடுதலை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான கருடன் படமும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வாரம் அவரது நடிப்பில் உருவான கொட்டுக்காலி படமும் வெளியாக உள்ளது.  

3 /6

இப்படி கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கருடன்' படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும்  புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.   

4 /6

'ஹாட்ரிக் கமர்சியல் ஹீரோ' சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.   

5 /6

இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.   

6 /6

சூரி -பிரசாந்த் பாண்டியராஜ் -லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்தத் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.