திருமணத்திற்கு பிறகு ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்!

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் ஜூலை 12ம் பிரமாண்டமாக நடைபெற்றது.

1 /6

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டிற்கும் ஜூலை 12ம் தேதி ஜியோ மையத்தில் ஆடம்பரமான வகையில் திருமணம் நடைபெற்றது.

2 /6

இந்த விழாவில் பல விஐபிகள் கலந்து  கொண்டனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாந்த்ரா பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

3 /6

கடந்த மார்ச் மாதம் முதலே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழா நடைபெற்று வந்தது. ஜாம்நகரில் கோலாகலமாக நிகழ்ச்சி நடைபெற்றது.

4 /6

பிறகு ஒவ்வொரு விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த வாரம் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஹாலிவுட் புகழ் ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சியும் அரங்கேறியது.

5 /6

இந்த திருமணத்தில் சாம்சங் தலைவர் லீ ஜே-யோங் முதல் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

6 /6

தற்போது இவர்களது திருமணம் இனிதே நிறைவடைந்து திருமண தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.