இந்த ‘5’ ராசிக்காரர்களுக்கு பணம் தங்காமல் விரயம் ஆகும்!

பணம் சம்பாதிக்கும் எல்லோரும் திட்டமிட்டு பணத்தை சேமிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் சிலருக்கு பணம் தங்காமல் கையை விட்டு நழுவிக்கொண்டே இருக்கிறது. இவர்கள் சம்பாதிப்பதில்லை என்பதல்ல, அதே வேகத்தில் செலவும் ஆகி விடும். ஜோதிட சாஸ்திரத்தில், இத்தகைய ராசிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில், அதிக செலவு காரணமாக, கடன் வாங்கி சிக்கலில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

1 /5

மிதுன ராசிக்காரர்கள், சில சமயங்களில் ஆடம்பரத்திற்காகவும், வெளித்தோற்றத்திற்காகவும் நிறைய பணம் செலவழிப்பார்கள். இந்த மக்கள் தங்கள் வாழ்க்கை நிலைமை நன்றாக இருக்கிறது என காட்டுக் கொள்ள அதிக பணத்தை செலவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் கையில் பணம் தங்குவது இல்லை.

2 /5

சிம்ம ராசிக்காரர்கள் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் நிறைய பணம் செலவழிப்பார்கள். இதனால்,  பல சமயங்களில்  பணப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இவர்கள் ஷாப்பிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். பல சமயங்களில் தேவையில்லாத பொருட்களையும் வாங்குவார்கள்.

3 /5

துலாம் ராசிக்காரர்கள் மற்ற எல்லா விஷயத்திலும் மிகவும் சமநிலையுடன் இருந்தாலும், பணத்தை நிர்வகிப்பதில் பின்தங்கியுள்ளனர். இவர்களால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் தனக்காக சேமிக்க முடிவதில்லை. அதேசமயம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால், ஓரலவு பணத்தை சேமிக்கலாம். 

4 /5

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை எடுத்து காட்ட தண்ணீரைப் போல பணத்தை செலவழிப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்காக செலவழிப்பதில் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பார்கள். ஆனால், எதிர்காலத்திற்காக சேமிப்பதில்  சரியான திட்டமிடல் இருக்காது.

5 /5

கும்ப ராசிக்காரர்கள் பணம் செலவழித்து பொருட்களை வாங்குவதில் மகிழ்ச்சி அடைவார்கள். அதனால்தான் எதையாவது வாங்கிக் கொண்டே இருப்பார். அவர்கள் பணத்தை மிச்சப்படுத்த கடினமாக முயற்சி செய்தாலும், அவை பெரும்பாலும் தோல்வியடைகின்றன. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)