வங்கி தொடர்பான மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

சைபர் மோசடிகளில் சிக்கிக்கொண்டு பணத்தை இழந்துவிடாமல் இருக்க நாம் தான் கவனமுடன் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நாம் பணத்தை இழக்க நேரிடும்.

 

1 /5

வங்கிகள் சம்மந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து வருகிறது, வங்கிகளிலிருந்து தான் இந்த செய்தி வந்திருக்கிறது என நினைத்து பலரும் மோசடி இணைப்புகளை க்ளிக் செய்து பணத்தை இழந்து விடுகின்றனர்.  இதுபோன்ற மோசடிகளில் இருந்து நாம் தான் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.  

2 /5

பொதுவாக வங்கிகள் அனுப்பும் செய்தியில் வங்கியின் பெயர் சேர்க்கப்படும். VM-HDFCBK, AD-hdfcbn மற்றும் JD-HDFCBK ஆகியவை தகவல்தொடர்புகளை வழங்க HDFC வங்கி பயன்படுத்தும் சில செய்தி பெயர்கள் ஆகும். எந்த வங்கியும் தனது வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள பட்டியலிடப்படாத தனிப்பட்ட எண்ணைப் பயன்படுத்துவதில்லை.  எனவே, தனிப்பட்ட எண்ணிலிருந்து செய்திகள் வந்தால் அது மோசடி என்று புரிந்துகொள்ள வேண்டும்.  

3 /5

பெரும்பாலும் வங்கிகள் காண்டாக்ட் அல்லது ஸ்டெப் பை ஸ்டெப் மூலம் மட்டுமே தாளை அனுப்பும், நீங்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்த முயற்சித்தால் மட்டுமே வங்கி மெசேஜில் லிங்கை சேர்க்கும்.  உங்கள் பானை இந்த இணைப்பின் மூலம் ஆதாருடன் இணைக்கவும் என்பது போன்ற செய்திகள் வந்தால் அந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்.  

4 /5

மொழி மற்றும் இலக்கணம் ஆகியவற்றை வைத்தே இது மோசடியா என்பதை கண்டறிய முடியும், இதில் ஏற்படும் பிழைகளை வைத்து அந்த செய்தி போலியானதா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.  

5 /5

ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், 'to avoid interruption' என்றும், மின் கட்டணத்திற்கு "if you don't update your account will be suspended." என்றும் செய்திகள் வந்தால் இது மோசடியை குறிக்கும் செய்தி என்று உணர வேண்டும்.