தக்காளி மூலம் காசு சம்பாதிக்க சரியான நேரம்... கொஞ்சம் இடம் இருந்தால் போதும் காசு கொட்டும்

Tomato farming ; பணம் சம்பாதிக்க வழியில்லையே என யோசித்துக் கொண்டிருந்தால், தக்காளி மூலம் சம்பாதிக்கக்கூடிய நேரம் இப்போது வரப்போகிறது. குறுகிய காலத்தில் நல்லா சம்பாரிக்கலாம்.

Tomato farming Tips : விவசாயத்தில் பெரிய லாபம் இல்லை என பலரும் சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் பழைய காலத்தில் பயிரிட்டதுபோல் இன்றும் பயிரிடும் முறையை பின்பற்றினால் உங்களால் எதிர்பார்த்த லாபம் எடுக்க முடியாது. விவசாயத்திலும் புதுமையான விஷயங்களை கடைபிடித்தால் மட்டுமே நல்ல லாபத்தை பெற முடியும். 

1 /9

அந்தவகையில் தக்காளி விளைச்சலில் புதிய முறையை பின்ற்றி அசாமில் வசிக்கும் சாங்மாய் என்ற விவசாயி ஒருவர் நல்ல வருவாயை பெற்று வருகிறார். குறைந்த நிலம், குறைந்த செலவு, குறைந்த நேரத்தில் அதிக மகசூல், இந்த மூன்றும்தான் சாங்மாய் விவசாயத்தின் அடிப்படை. தனித்துவமான முறையில் விவசாயம் செய்வதன் மூலம், அவர் வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசின் பண்டிட் தீன்தயாள் அந்தியோதயா கிரிஷி விருதையும் பெற்றுள்ளார்.

2 /9

தக்காளி விவசாயத்தில் லாபம் - கிரிஷி ஜாக்ரனின் அறிக்கையின்படி, தக்காளி சாகுபடியில் சங்மாயின் முறை மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டது. "மற்ற விவசாயிகள் தக்காளியை கிலோ 15 ரூபாய்க்கு விற்கிறார்கள், நான் கிலோ 40 முதல் 80 ரூபாய்க்கு விற்கிறேன்" என்று சாங்மாய் பெருமிதத்துடன் கூறுகிறார். 

3 /9

உண்மையில், பொதுவாக யாரும் தக்காளியை பயிரிடாத பருவமழை காலத்தில் தக்காளியை பயிரிடுவார். இதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணம். கிரீன்ஹவுஸ் என்பதால், தரமான தக்காளியை வளர்க்க முடிகிறது, அதன் காரணமாக அதிக விலை கிடைக்கிறது என்றும் சங்மாய் தெரிவிக்கிறார்.

4 /9

தக்காளியுடன் காய்கறிகள் வளர்ப்பு - பசுமை இல்லத்தில் தக்காளி மட்டுமின்றி கத்தரிக்காய், மிளகாய், மரக்கன்றுகளும் வளர்க்கப்படுகின்றன. "கிரீன்ஹவுஸில் பயிர்களை வளர்ப்பதன் நன்மை என்னவென்றால், சீசனில் கூட விவசாயம் செய்யலாம், இது அதிக லாபத்திற்கு வழிவகுக்கும்" என்று சாங்மாய் கூறுகிறார். 

5 /9

இது அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் புதிய காய்கறிகளையும் விளைவிக்க முடிகிறது. சாங்மாய் தனது விவசாயத்தில் மட்டும் நின்றுவிடவில்லை. அருகில் உள்ள விவசாயிகளுக்கும் உதவுகிறார். 

6 /9

இவர்களுக்கு பப்பாளி, மிளகாய், எலுமிச்சை போன்ற செடிகளை வழங்குவதுடன், புதிய விவசாய முறைகள், மருந்துகள், உரம், தண்ணீர் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளையும் வழங்குகிறார். தேவைப்படும்போது அவரும் அவர்களின் வயல்களுக்குச் சென்று அவர்களுக்கு உதவுகிறார்.

7 /9

சாங்கமாய் விவசாய வருமானம் -  நெல் விதைகளும் சங்மாயின் முக்கிய வருமான ஆதாரமாகும். வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கும் வலிமை கொண்ட நல்ல நெல் விதைகளை பல ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறார். சாங்மாய் விவசாயத்தை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாகப் பார்க்கிறார். 

8 /9

பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் விலங்குகள் மற்றும் பறவைகளை ஒன்றாக வயலில் வளர்ப்பதன் மூலம் விவசாயம் வலுவடைகிறது என்று அவர் நம்புகிறார். ஒரு பயிர் தோல்வியடைந்தால், மற்றொரு பயிர் மூலம் இழப்பீடு பெறலாம். “பப்பாளி விளைச்சல் நன்றாக இல்லை என்றால், அதே வயலில் விளையும் கத்தரிக்காயோ அல்லது அதன் கீழ் விளையும் கொத்தமல்லியோ நிச்சயம் ஓரளவு வருமானத்தைத் தரும்” என்று கூறுகிறார். 

9 /9

சந்தை தேவைக்கேற்ப பயிர்களை வளர்க்கவும் சாங்மாய் விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறார். "கடின உழைப்பின் பலன்கள் கெட்டுவிடக்கூடாது, எனவே விவசாயிகள் சந்தையில் தேவைப்படும் பயிர்களை மட்டுமே வளர்க்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார். இந்த வழியில் யாரும் எப்போதும் லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் அவர்.