உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும் சில ‘சூப்பர்’ உணவுகள்!

நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். 

1 /5

நெய் தினமும் உணவுடன் சிறிது நெய் சாப்பிடவும். நெய் சாப்பிடுவதால் சோர்வு நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாதத்துடன் சாப்பிட பிடிக்கவில்லை என்றால்,  பாலில் நெய் சேர்த்து அருந்தலாம். 

2 /5

புதினாவை உணவில்  சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த வெவ்வேறு வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். தலைவலி மற்றும் பருவகால காய்ச்சல்களில் இருந்து விடுபட உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

3 /5

பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இது சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், ஆற்றலைத் தக்கவைக்க உதவும். 

4 /5

பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, இவற்றை சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சோர்வு மற்றும் பலவீனத்தை அகற்ற, உங்கள் உணவில் பருப்பு வகைகளை சேர்க்க மறக்காதீர்கள். 

5 /5

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால் சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும். உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதால் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது மஞ்சள் பால் அருந்தலாம்.