ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...

Hariyali Teej 2024 : ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது

ஹரியாலி என்றால் பசுமை, தீஜ் என்றால் மூன்றாம் நாள். மழைக்காலத்தில், பசுமை பொங்கவும், கணவன் மனைவி ஒற்றுமையுடன் காதலுடன் தாம்பத்திய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதன் குறியீடாக வட இந்தியாவில் இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது

1 /8

தென்னிந்தியாவில் வரலட்சுமி விரதம், ஆடிப்பூரம் போன்ற முக்கியமான பூஜைகளைப் போல, வட இந்தியாவில் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது

2 /8

சைவம் வைணவம் என இரு பிரிவிலுமே ஆடி மாதத்தில் அமாவாசைக்கு மூன்றாவது நாள் வரும் இன்றைய நாள் மிகவும் சிறப்பானது. வைணவத்தில் ஆண்டாளுக்கு இன்று அவதார நாள் ஆடிப்பூரம்

3 /8

சிவனை வழிபடும் சைவ சித்தாந்தத்தின்படி, இன்று சிவ-பார்வதியை வணங்கினால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்  

4 /8

ஹரியாலி தீஜ் நாளன்று விரதம் இருந்து வழிபடுவதுடன், தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷமானது

5 /8

சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வழிபடுவது அனைத்து சுகபோகங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை

6 /8

ஆண்டவனையே அன்பால் ஆண்ட ஆண்டாள் நாச்சியரின் பிறந்த நாளான இன்று வைணவ ஆலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடுகள் செய்வது வழக்கம்

7 /8

பெரியாழ்வார் என்று அறியப்படும் திருமங்கையாழ்வர் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியாரை வளர்த்து, பெருமாளுக்கே மாமனாராக மாறியதால் பெரியாழ்வரானார்  

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது