முடியில் Split Ends பிரச்னையா... இந்த 3 தீர்வுகளை வீட்டிலேயே செய்யலாம்

Home Remedies For Split Ends: முடி நம் அழகின் முக்கிய பகுதியாகும், அது இல்லாமல் ஒட்டுமொத்த அழகில் மோசமான விளைவு உள்ளதாக பொதுப்பார்வையில் கருதபடுகிறது. முடி பிரச்னையை கவனிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அதில், முக்கியமான பிரச்னை குறித்து இதில் காணலாம்.

  • Jul 31, 2023, 14:50 PM IST

 

 

 

 

 

 

 

 

 

1 /7

தலைமுடிகளின் முனைகளில் ஏற்படும் பிளவு (Hair Split Ends) மிகப்பெரிய பிரச்னையாக கருதப்படுகிறது.  இதன் காரணமாக பல பெண்கள் பதற்றத்தில் இருப்பார்கள். இதன் காரணமாக, முடியின் வளர்ச்சி நின்றுவிடும். அதில் இருந்து விடுபட அவர்கள் அடிக்கடி கத்தரிக்கோலால் வெட்ட வேண்டிய சூழல் வரும்.   

2 /7

பொதுவாக இது ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் நிகழ்கிறது, ஏனெனில் முடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காது. முடியை வெட்டாமல், பிளவுபட்ட முனைகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

3 /7

முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக மாறினால், முனைகள் பிளவுபடும் பிரச்சனை எழுகிறது என்று பெரும்பாலான முடி சார்ந்த நிபுணர்கள் நம்புகிறார்கள். உண்மையில், முடியின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கு உள்ளது மற்றும் அது சேதமடையும் போது, முடியின் முனைகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.

4 /7

1. ஷாம்பூ வேண்டாம்: ரசாயன அடிப்படையிலான கூந்தல் பொருட்களை அதிகம் பயன்படுத்த தொடங்கும் போது இத்தகைய முடி பிரச்சனை ஏற்படுகிறது. கடுமையான ஷாம்புக்குப் பதிலாக லேசான ஷாம்பூவைப் பயன்படுத்துவது நல்லது, இது படிப்படியாக முனை பிளவு பிரச்சனையை நீக்கும்.  

5 /7

2. சூடான டவலை பயன்படுத்தவும்: பிளவு முனைகளில் இருந்து விடுபட, சூடான துண்டுகளின் செய்முறை பாட்டி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. மேலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முதலில் தலைமுடியில் தேங்காய் எண்ணெயை கொண்டு லேசான மசாஜ் செய்யுங்கள். பிறகு ஒரு சுத்தமான டவலை ஒரு வாளி வெந்நீரில் நனைத்து, பின் டவலை அழுத்தி தேய்க்கவும். இந்த டவலை உங்கள் தலையில் தலைப்பாகை போல் போர்த்தி 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். இந்த செயல்முறையை 4-5 முறை செய்யவும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால், முனைகளில் உள்ள பிளவுகள் நீங்கும்.

6 /7

3. பப்பாளியின் உதவியை நாடுங்கள்: பப்பாளி நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் அது நம் தலைமுடிக்கு சமமாக நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கு ஒரு பழுத்த பப்பாளியை எடுத்து அதன் கூழ் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் தயிர் கலந்து தலை மற்றும் முடியில் தடவவும்.

7 /7

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)