தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் உங்கள் வாழ்க்கை ஜொலிக்கும்

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. இம்மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. தீபாவளியன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, தீபாவளி நாளில் குறிப்பிட்ட 4 மிருகங்களை பார்த்தால், அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் உங்கள் மீது விழும் என்று அர்த்தமாகும். இந்த விலங்குகளை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

1 /4

ஜோதிட சாஸ்திரத்தின் படி, தீபாவளி நாளில் பூனையை பார்த்தால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது லட்சுமியின் அருள் உங்கள் வீட்டில் விழும்.

2 /4

பலருக்கு வீட்டில் பல்லி தொல்லை உள்ளது. ஆனால் தீபாவளியன்று பல்லியைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடத்தின் படி, பல்லியின் தோற்றம் லட்சுமி தேவியின் மகிழ்ச்சியின் அடையாளமாகும்.

3 /4

ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாகும். இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தீபாவளி நாளில் எங்காவது ஆந்தையைக் கண்டால், உங்கள் அதிர்ஷ்டம் திறக்கும் என்று அர்த்தம். தீபாவளியன்று ஆந்தையைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

4 /4

பசு இந்து மதத்தில் தாயாக கருதப்படுகிறது. தீபாவளி நாளில் எங்காவது காவி நிற பசுவைக் கண்டால், அது மிகவும் நல்ல அறிகுறியாகும்.