ஐபிஎல் தொடரில் வரப்போகும் மாற்றங்கள்...! - இன்று முக்கிய மீட்டிங்

IPL 2025 Mega Auction: 10 ஐபிஎல் அணிகளுக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்தமாக ஆலோசனை மேற்கொண்டு மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளிவரலாம். 

  • Jul 31, 2024, 12:39 PM IST

ஐபிஎல் ஆட்சி மன்ற குழுவும், 10 அணிகளின் உரிமையாளர்களுக்கும் இன்று கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதனை தொடர்ந்து என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

1 /8

ஐபிஎல் 2025 தொடர் மற்றும் மெகா ஏலத்திற்கு முன், சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 10 அணிகளும், ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவும் இன்று மும்பையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளன.   

2 /8

இந்த பேச்சுவார்த்தையில் அணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துகள் முன்வைக்கப்படும். அனைத்து அணிகளின் கருத்தையும் கேட்ட பின்னர் அவை குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.   

3 /8

அந்த வகையில், முக்கியமாக ஏலத்தில் அணிகளின் பர்ஸ் தொகை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ரூ.100 கோடிக்கு இருக்கும் பர்ஸ் தொகை, 20% - 25%  உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

4 /8

அதாவது ரூ.120 கோடி முதல் ரூ. 125 கோடி வரை உயரலாம். இதற்கு பல அணிகள் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன. இதனால், வீரர்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.   

5 /8

அதேபோல், கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகமான இம்பாக்ட் பிளேயர் விதி தற்போது பெரிய பிரச்னையாக இருப்பதாக கூறப்படுகிறது.   

6 /8

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்-ரவுண்டர்களின் வளர்ச்சியை தடுப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில், இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.   

7 /8

அதேபோல், எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து ஒவ்வொரு அணிகளும் வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பதால் அதுகுறித்து முடிவு எடுப்பதே சற்று கடினமாக இருக்கும்.   

8 /8

ஒரு சில அணிகள் 8 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதுவும் RTM ஆப்ஷனையும் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றன. இவை ஏற்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.