சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறும், வெற்றிகள் குவியும்

Sani Peyarchi in 2023: ஜனவரி 17, 2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழையும் சனி, ஆண்டு இறுதி வரை இந்த ராசியில் இருப்பார். இந்த பெயர்ச்சி பல ராசிகளில் பல வித தாக்கத்தை ஏற்படுத்தும். சனியின் பெயர்ச்சியால் ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த ராஜயோகமாகக் கருதப்படுகிறது. 

சனியின் இந்த பெயர்ச்சியால், சில ராசிகளுக்கு மிகவும் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறலாம். இந்த ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் வலுவான பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /5

சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும்.

2 /5

சனியும், ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனும் நட்பு கிரகமாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். சனியின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

3 /5

சனியின் சஞ்சாரத்தால் உருவாகும் ஷஷ ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல வகையிலும் நன்மைகளைத் தரும். சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். 

4 /5

மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி மகர ராசிக்கு அதிபதியாவார். ஆகையால், சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழிலில் சிறப்பான வெற்றியைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.   

5 /5

சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கவுள்ளார். இது ஷஷ ராஜயோகத்தை உருவாக்கும். இந்த யோகத்தினால் உருவாகும் மிகப்பெரிய நன்மை கும்ப ராசிக்காரர்களுக்கே கிடைக்கும். இவர்களின் அனைத்து பணிகளும் அதிர்ஷ்டத்தின் துணையுடன் வெற்றிகரமாக முடிவடையும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)