மே 1 முதல் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்

Guru Gochar 2024: குருவின் தாக்கத்தால், ஒருவரின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு உண்டாகும் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மே 1 ஆம் தேதி, குரு ரிஷபத்தில் இடப் பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலனைத் தரும்.

Guru Peyarchi Palan 2024: குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகளும் ஏற்படும். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1 /6

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சிறப்பான பலன் உண்டாகும். பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்கும். திடீர் நிதி ஆதாயம் உருவாகும். இன்பம் பெருகும். மூதாதையர் சொத்துக்களால் பலன் பெறலாம். திருமணத்திற்கு பொருத்தமான வரன் கிடைக்கும்.   

2 /6

ரிஷபம்: ரிஷபத்தில் குரு பெயர்ச்சி அடையப் போவதால், உங்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும், செல்வம் பெருகும். பண வரவு அதிகமாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும்.  

3 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணியிடத்திலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மாணவர்கள் நன்மை அடைவார்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  

4 /6

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சிறப்பான நற்பலன்களை தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். நிதி ஆதாயம் உண்டாகும். வெற்றியை அடைவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயமும் பெறலாம்.  

5 /6

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகள் சுலபமாக முடிவடையும். நிலம் அல்லது வாகனம் வாங்கலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.