ரஞ்சி அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணங்களுக்காகவா?

Prithvi Shaw: மும்பையின் ரஞ்சி கோப்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். பிட்னஸ் இல்லை என்று கூறி அவரை நிர்வாகம் நீக்கி உள்ளது.

 

1 /6

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பிரித்வி ஷாவிற்கு இது மேலும் பின்னடைவைக ஏற்படுத்தி உள்ளது.  

2 /6

இந்திய அணியில் ஓப்பனிங் வீரராக இருந்த ஷா கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது.  

3 /6

மேலும் பயிற்சி போட்டிகளில் ஈடுபடாமல் இருப்பது, முறையான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடாதது போன்ற சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.  

4 /6

பிரித்வி ஷாவின் உடற்தகுதி குறித்தும் நிர்வாகம் கவலையில் உள்ளது. இதனால் சில கடினமாக முடிவுகளை தற்போது எடுத்துள்ளனர்.  

5 /6

மும்பை அணியில் ஷாவை எடுப்பதற்கு கேப்டன் அஜிங்க்யா ரஹானே எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை அணியில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இன்ஸ்டாவில் மும்பை நிர்வாகத்தை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.  

6 /6

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "ஒரு இடைவெளி தேவை, நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் அதிகார்வப்பூர்வமாக MCA தெரிவிக்கவில்லை.