அமாவாசை விரதம் பிடிப்பவர்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்!

நமது முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து வழிபாடு செய்யும் நாளாக அமாவாசை நாள் அமைகிறது.

 

1 /5

அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது, வாசலில் கோலமிடுவது தெய்வத்திற்கு உகந்தது.  எனவே அன்றைய தினம் வாசலில் கோலம் போடாமல் முன்னோர்களை வழிபட்டுவிட்டு அதன் பிறகே தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.   

2 /5

அமாவாசை விரதத்தை சுமங்கலிகள் பிடிக்கக்கூடாது, கணவன் உயிருடன் இல்லாத பெண்கள் தான் அமாவாசை விரதம் பிடிக்கவேண்டும்.  மேலும் சுமங்கலிகள் வெறும் வயிற்றோடு அமாவசைக்கு உணவு சமைக்கக்கூடாது.  

3 /5

அமாவசை விரதம் எடுப்பவர்கள் காலை உணவு சாப்பிடக்கூடாது, நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு, முதலில் காகத்திற்கு இலையில் சாப்பாட்டை வைத்துவிட்ட பிறகு தான் சாப்பிட வேண்டும்.  

4 /5

அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது, விரதமிருப்பது, காகத்திற்கு உணவு வைப்பது போன்றவற்றோடு அன்றைய தினம் ஒரு நான்கு பேருக்காவது மத்திய உணவளித்து அவர்களின் பசியை ஆற்ற வேண்டும்.  இப்படி செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்.  

5 /5

அமாவசை நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி குடும்பத்தினர் அனைவரும் முன்னோர்களை வழிபட வேண்டும்.  மேலும் விரதம் இருந்தவர்கள் இரவில் சாதம் சாப்பிடாமல் அப்போது புதிதாக சமைத்த இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டங்களை சாப்பிட வேண்டும்.

You May Like

Sponsored by Taboola