இந்த நாடுகளில் உங்களால் எளிதாக குடியுரிமை வாங்க முடியும்!

தற்போது பல நாடுகளில் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாக மாறி உள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் எளிதாக குடியுரிமை பெற முடியும். 

 

1 /5

போர்ச்சுகல்: போர்ச்சுகல் நாட்டில் ரியல் எஸ்டேட்டில் 5 ஆண்டுகள் முதலீடு செய்து இருக்க வேண்டும். அவர்களின் தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, எந்த ஒரு குற்றமும் சுமத்தப்படாத நபராக இருக்கும் பட்சத்தில் குடியுரிமையை பெற முடியும். 

2 /5

ஆன்டிகுவா மற்றும் பார்புடா: ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டில் குடியுரிமை பெற நீங்கள் 18 வயதை அடைந்து இருக்க வேண்டும். மேலும் இந்த நாட்டில் முதலீடுகளை தாண்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அந்த நாட்டில் தங்கும் தேவையை பூர்த்தி செய்து கொண்டால் குடியுரிமையை பெற்று விடலாம்.

3 /5

மால்டா: மால்டா நாட்டில் குடியுரிமை பெற விண்ணப்பதாரர் 18 வயதை அடைந்து இருக்க வேண்டும். அதே போல குறிப்பிட்ட அளவு அந்த நாட்டில் முதலீடு செய்து இருக்க வேண்டும். மேலும் குற்றமற்றவராக இருக்க வேண்டியது அவசியம். 

4 /5

குராக்கோ: கரீபியன் நாடான குராக்கோவில் குடியுரிமை பெற அந்த நாட்டில் முதலீடு செய்திருந்தாலே போதுமானது. குடியுரிமை பெற குறைந்த பட்ச முதலீட்டுத் தொகை $280,000 ஆகும்.

5 /5

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் கோல்டன் விசாவைப் பெற, கடைசி பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்கள் அந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டும். அதே சமயம் முதலீடும் செய்திருக்க வேண்டும். குறிப்பாக ஸ்பானிஷ் கலாச்சாரம் மற்றும் மொழி பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.