‘புன்னகை தேசம்’ பட நாயகனா இது? ஆளே மாறிட்டாரே! வைரல் புகைப்படங்கள்..

Actor Tarun Kumar Latest Photos : தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர், தருண் குமார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actor Tarun Kumar Latest Photos : தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தவர் தருண் குமார். 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமான நடிகராக இருந்த இவர், பின்னர் காணாமல் போய் விட்டார். இந்த நிலையில் இவரது ரீசண்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தென்னிந்திய திரையுலகில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமான நாயகனாக வலம் வந்தவர், தருண் குமார். இவர், முதன் முதலில் நடித்த படம் அஞ்சலி. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் இவர் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்திருப்பார். 

2 /8

90களிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இவர், முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி தூக்கினார். பின்னர் தொடர்ந்து திரையுலகின் வெளிச்சத்திலேயே இருந்த இவர், 2000ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். 

3 /8

2001ஆம் ஆண்டு இவர் நடித்த ‘காதல் சுகமானது’ திரப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அப்போதைய இளம் பெண்களுக்கு இவர் பெரிய க்ரஷ்ஷாக இருந்தார்.

4 /8

அடிக்கடி, பிரபல சேனலில் ஒளிபரப்பப்படும் ‘புன்னகை தேசம்’ படத்திலும் தருண் ஹீரோவாக நடித்திருப்பார். சினேகாவுடன் இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இவர், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடம் பிடித்தார். 

5 /8

எனக்கு 20 உனக்கு 18 படம், 2003ஆம் ஆண்டு வெளியானது. அதில், இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, தோழியாக ஸ்ரேயா நடித்திருந்தார். இதில் இவர் நடித்திருந்த ஸ்ரீதர் கதாப்பாத்திரத்திற்கு பெண் ரசிகர்கள் பலர் இருந்தனர். 

6 /8

தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு ஏதோ ஒரு காரணத்தால் பட வாய்ப்புகள் குறைந்து போனது. 2018ஆம் ஆண்டில் ஒரு படத்தில் நடித்து விட்டு அதோடு சினிமாவிற்கே முழுக்கு போட்டு விட்டார். 

7 /8

தருண், திரையுலகில் ஆக்டிவாக இல்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கிறார். தனது குடும்பத்தினர் மற்றும் அரசியல்/திரை பிரபலங்களுடன் இவர் எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவதுண்டு. 

8 /8

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “அவரா இது..? ஆளே தெரியாமல் மாறிட்டாரே..!” என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.