2024-ல் ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய கிரிக்கெட்டின் உட்ச நட்சத்திரம்

1 /8

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.  

2 /8

அவர் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதே 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதில்லை. அவரது தலைமையிலான இந்திய அணி 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் தோல்வியை தழுவியது.  

3 /8

அதன்பிறகு பிசிசிஐ அறிவித்த 20 ஓவர் இந்திய அணியில் ரோகித் பெயர் இல்லை. அவர் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவதும் ஏறக்குறைய சந்தேகம் தான்.  

4 /8

ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் 20 ஓவர் இந்திய அணியில் விளையாடுவாரா? இல்லையா என்பது உறுதியாக தெரிந்துவிடும். ஒருநாள் போட்டியிலும் இனி ரோகித் சர்மா இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறி.  

5 /8

அடுத்த உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்ய பிசிசிஐ முனைப்பு காட்டினால், ரோகித் சர்மாவுக்கு நிச்சயம் இந்த வடிவத்திலும் இடம் இருக்காது.  

6 /8

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.   

7 /8

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது விரைவில் அவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. கேப்டன் பொறுப்பு இல்லாமல் விளையாட விரும்பினால் இன்னும் ஒருசில ஐபிஎல் தொடர்களில் ரோகித் சர்மா விளையாடலாம்.   

8 /8

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அவரின் ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.