பங்கு சந்தையில் ‘இந்த’ நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால் 30% லாபம்!

வர்த்தக வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில்  சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகளை இழந்தது. ஆனால் வலுவிழந்த பங்கு சந்தையிலும் பெரிய லாபம் ஈட்டலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் 5 வலுவான பங்குகளை வாங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஹிண்டால்கோ, ஐடிசி மற்றும் பஜாஜ் ஃபின் பங்குகள் ஆகியவை அடங்கும். முதலீட்டாளர்கள் ஒரு வருட காலத்தில் சுமார் 30 சதவிகிதம் அதிக லாபம் ஈட்ட முடியும்.

1 /6

ICICI  வங்கி: இந்த நிறுவனத்தின் பங்கு 1150 ரூபாய் வரை உயரும் என கூறப்படுகிறது. இந்த பங்கு சற்று சரிவுடன் ரூ.897.25 என்ற விலையில் வர்த்தகமாகிறது.

2 /6

M&M பங்கு விலை: இந்த பங்கு ரூ.1475 வரை அதிகரிக்க கூடும். பலவீனமான சந்தையில் கூட மும்பை பங்கு சந்தையில் இந்த பங்கு ரூ.1205க்கு வர்த்தகமாகிறது.

3 /6

உள்நாட்டு தரகு நிறுவனமான MOFSL, பங்குக மதிப்பீட்டை வழங்கியுள்ளது. ஹிண்டால்கோ பங்கு விலை ரூ.510 வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இன்று இந்த பங்கு சுமார் 1 சதவீதம் பலத்துடன் ரூ.425.45க்கு வர்த்தகமாகிறது.

4 /6

ITC பங்கு விலை: இன்ட்ராடேயில் பங்கு ரூ.400-ஐ தொட்டது. பங்கு மேலும் ஏற்றம் காட்ட முடியும். பங்கு மதிப்பு ரூ.450 ஐ தொடும் என கூறப்படுகிறது.

5 /6

பஜாஜ் ஃபைனான்ஸ்: மும்பை பங்குசந்தையில் இந்த பங்கு ரூ.5921-க்கு வர்த்தகமாகிறது. வரும் நாட்களில் பங்கு 6,700 அளவைத் தொடும் என கூறப்படுகிறது. 

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள பங்கு முதலீட்டு ஆலோசனைகள் தரகு நிறுவனங்கள்/நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இவை Zee News கருத்துக்கள் அல்ல. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.