போலியாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை.. அரசு போட்ட ஒரே கண்டிஷன்

Fake ration card prevention | போலி ரேஷன் கார்டுகளை தடுக்க அரசு போட்ட சூப்பர் கண்டிஷன். இனி வாய்ப்பே இல்லை. 

Fake ration card prevention status | போலி ரேஷன் கார்டுகளை தடுக்க அரசு சூப்பரான ஒரு கண்டிஷனை போட்டுள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /9

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரேஷன் கார்டு வைத்திருந்தால் தான் அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியும். இதற்காகவே பலர் போலியாக விண்ணப்பங்களை கொடுத்து ரேஷன் கார்டுகளை பெறுகின்றனர்.

2 /9

அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட எண்ணற்ற அரசின் சேவைகளுக்கு பிரதானமாக ரேஷன் கார்டு இருக்கிறது.

3 /9

இந்த சலுகைகளை பெறுவதற்காகவே பலர் போலியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்று முறைகேடாக அரசின் சலுகைகளை பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரண்டு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் களைய அரசு மிகப்பெரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது.

4 /9

அதில் ஒன்று தான் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அரசு போட்டிருக்கும் கண்டிஷன். அதாவது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் எல்லாம் அவ்வளவு சாதாரணமாக குடும்ப அட்டை பெற்றுவிட முடியாது. 

5 /9

திருமணமான புதிய தம்பதிகள் என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்றால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இருவரும் ஆவணத்தை சமர்பித்தால் மட்டுமே ரேஷன் கார்டு விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

6 /9

அதுமட்டுமல்லாமல் திருமணம் பதிவுச் சான்றிதழ் காண்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வீட்டு ரசீது அல்லது மின் கட்டண எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஆவணமாக கொடுக்க வேண்டும். 

7 /9

இத்தனை ஆவணங்களை கொடுத்தபிறகும் ரேஷன் கார்டு தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக வந்து நீங்கள் கொடுத்த ஆவணத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்வார்.

8 /9

அதில் ஆவணங்கள் அனைத்தும் உண்மை என தெரிந்த பிறகே ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பிறகு உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக கொடுக்கப்படும்.

9 /9

போலி ரேஷன் கார்டு, இரண்டு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பது ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும். தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மூலம் இனி யாரும் போலி ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.