ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் வாங்கி சோடைபோன டாப் வீரர்கள்


ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை கொட்டி வாங்கப்பட்ட வீரர்கள் விளையாடமல் இருப்பது, அணி நிர்வாகத்தினரை எரிச்சலடையச் செய்துள்ளது. 

இஷான் கிஷன் முதல் ஜானி பேரிஸ்டோவ் வரை நம்பி எடுக்கப்பட்ட வீரர்கள், தங்கள் அணிகளுக்கு பட்டை நாமத்தை சாற்றியுள்ளனர். 

1 /5

சென்னை சூப்பர் கிங்ஸூக்காக விளையாடிய ஷர்துல் தாக்கூர் இம்முறை டெல்லி அணிக்காக களம் கண்டுள்ளார். 10.75 கோடிக்கு அவரை டெல்லி அணி வாங்கியது. பவுலிங் மற்றும் பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.  

2 /5

ஷாரூக்கான். தமிழக வீரரான இவர் கடந்த ஆண்டும் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஏலத்திலும் அவரை போட்டி போட்டு பஞ்சாப் அணி வாங்கியது. எதிர்பார்த்த அளவுக்கு ஷாருக்கான் விளையாடவில்லை.

3 /5

சன்ரைசர்ஸ் அணியில் இருந்து விலகிய ஜானி பேரிஸ்டோவை பஞ்சாப் அணி, 6.75 கோடிக்கு வாங்கியது. ஆனால், இவர் இதுவரை ஒருபோட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை. 

4 /5

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கபட்ட வீரர் இஷான் கிஷன். 15.25 கோடி மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஆனால், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாமல் மும்பை நிர்வாகத்தை ஏமாற வைத்துள்ளார்.  

5 /5

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சாஹரை 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. தோனியை விட அதிக விலைக்கு வாங்கப்பட்ட இவர் காயம் காரணம் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.