உங்களுக்கு வரும் அழைப்புக்கு இனி AI பதிலளிக்கும்..! புதிய அம்சம் அறிமுகமாயிருச்சு

Truecaller செயலியில் புதிய அம்சம் அறிமுகமாகியிருக்கிறது. AI உதவியுடன் உங்கள் சொந்த குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். இந்த அம்சத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்

1 /7

இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவு (AI) மிகவும் பிரபலமாக உள்ளது. இப்போது ட்ரூகாலர் செயலி AI உதவியாளரின் உதவியுடன் தங்கள் சொந்த குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். 

2 /7

மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்த புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

3 /7

தற்போது இந்த வசதி பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதில் பயனர்கள் தங்கள் விருப்பப்படி தயார் செய்த பதில்களை அழைப்புகளுக்கு கொடுக்கலாம்.

4 /7

அதாவது மொபைல் எடுக்க முடியாத தருணத்தில் உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு ரெடிமேட் பதில்களை உங்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவே கொடுத்துவிடும். இதனால் உங்களின் பிஸியான சூழலை அழைப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

5 /7

இதற்காக மைக்ரோசாப்டுடன் ட்ரூ காலர் கைகோர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உங்கள் குரலை செயற்கையாக உருவாக்கும் அம்சமும் இருக்கிறது. முறையாக கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின்னரே தற்போது இந்த தொழில்நுட்பம் கிடைக்கும்.

6 /7

வரவிருக்கும் சில வாரங்களில், Truecaller இந்த தனிப்பட்ட உதவியாளர் குரல் அம்சத்தை பல நாடுகளுக்கு வர இருக்கிறது. 

7 /7

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஸ்வீடன் மற்றும் சிலி போன்ற நாடுகளில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.