Vastu Tips: அன்னை மகாலட்சுமி வீட்டில் நிரந்திரமாக வாசம் செய்ய வேண்டுமா!

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியை தீர்க்க படாத பாடு படும் நிலை உள்ளது. அதற்கு செல்வத்தை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டில் நிரந்திர வாசம் செய்ய, வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது.  

1 /5

வீட்டில் எங்கும்  குப்பை சேர அனுமதிக்க வேண்டாம். வீட்டின் கூரையில் குப்பை சேர்ந்தால், பொருளாதார சிக்கல் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

2 /5

உங்களிடம் செல்வம் சேர வேண்டும் என விரும்பினால், பணம் வைக்கும் உங்கள் அலமாரி அல்லது லாக்கர் சரியான திசையை நோக்கி வைத்திருப்பது அவசியம். அலமாரி அல்லது லாக்கரில் பணத்தை வைக்கும்போது, லாக்கரின் கதவு கிழக்கு நோக்கி திறக்கும் படி இருக்க வேண்டும். மேலும் பணம் வைக்கும் இடத்தை தூய்மை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பணம் சேரும். அசுத்தமான இடத்தில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.

3 /5

உங்கள் வீட்டு அலங்காரத்திற்காக  நீர் நிரப்பிய பொருள் ஏதேனும் வைத்திருந்தால், அதை எப்போதும் வடக்கே வைத்திருங்கள். அதே நேரத்தில் நீர் கசிவு ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  வடக்கு திசை குபேரரின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே தண்ணீரை இந்த திசையில் வைத்திருப்பது செல்வத்தை பெருக்கும். நிதி பிரச்சனை தீரும்.

4 /5

எந்தவொரு நீர் தொட்டியிலிருந்தும், அல்லது குழாய்களில் இருந்தும் தண்ணீர் கசியாமல் கவனமாக இருங்கள். வீட்டிலுள்ள தண்ணீர் விரயமானால்,  செல்வம் தங்காமல் விரயம் ஆகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. தண்ணீர் தொட்டி, டாங்க், குழாய் ஆகியவை சேதமடைந்தால், உடனடியாக அதை சரிசெய்யவும்.

5 /5

மேலே கூறியவற்றை தொடர்ந்து கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம். கீழே கூறப்பட்டுள்ள நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, நல்ல தீர்வு கிடைக்கும்.