கரும்பு தின்ன கூலியா; இந்த மாளிகையில் இலவவசமாக தங்கிவதோடு டிப்ஸும் பெறலாம்..!!

நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ஹாட் டப் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை கொண்ட ஆடம்பர வீட்டில்  தங்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.  அதுவும் ஆடம்பர மாளிகையில் இலவசமாக தங்கதோடு மட்டுமல்லாமல், கரும்பு தின்ன கூலியாக டிப்ஸும் கிடைக்கும் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா. ஆம், ஒரு நிறுவனம் ஒரு சொகுசு மாளிகையில் இலவசமாக தங்குவதற்கான வாய்ப்பையும், அங்கு 3 இரவுகளை செலவழிப்பதற்காக 50 ஆயிரம் ரூபாயையும் கொடுக்கிறது.

1 /5

கொரோனா ஊரடங்கு காரணமாக மாதக்கணக்கில் வீட்டில் சிறைப்பட்டு இருப்பவர்களுக்கு, ஒரு பொன்னான வாய்ப்பு. இங்கிலாந்தில் உள்ள மாளிகையில் அவர்கள் விடுமுறை காலத்தை இலவசமாக செலவிடலாம்.

2 /5

இந்த அற்புதமான மாளிகையில் ஒரு நபர் 3 இரவுகள் தங்குவதற்கு 500 பவுண்டுகள் (50 ஆயிரம் ரூபாய்) கிடைக்கும். இந்த மாளிகையின் பெயர் மேனர் ஹவுஸ். தி சன் பத்திரிக்கை அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

3 /5

இந்த வீட்டில் வசிக்கும் நபருக்கு நீச்சல் குளம் மற்றும் ஹாட் டப்பை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும். இந்த மாளிகையில் 8 படுக்கையறைகள் உள்ளன.

4 /5

இந்த மாளிகை குறித்த விளம்பரத்திற்காக  இந்த பணம் கொடுக்கப்படுகிறது. மாளிகையில் தங்கியிருக்கும் நபர் தங்கள் கருத்துக்களை, மாளிகை குறித்த மதிப்பீடுகளை மை ஹோம் மூவ் கன்வேயிங் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். இதற்காக, அந்த நபர் செப்டம்பர் 21 முதல் 23 வரை இந்த மாளிகையில் தங்க வேண்டும்.

5 /5

மாளிகை குறித்த மதிப்பீட்டை சிறந்த வகையில், சாதகமான கருத்துக்களைப் பெற விரும்புகிறது. நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி தேவ் மல்லே  இது குறித்து கூறுகையில், "ஒரு புதிய வீட்டை வாங்குவது ஒருவர் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு ஆகும். அதனால், வாங்குபவருக்கு அவர் நம்பக்கூடிய ஒருவரின் ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் தேவை. மேன்ஷன் டெஸ்டர் இந்த வேலையில் அவருக்கு நிறைய உதவ முடியும்” என்றார்