வழிபாட்டுதலம் கட்டுவதில் தகராறு : இருவர் கொலை வழக்கில் தீர்ப்பு..!

ராமநாதபுரம் அருகே வழிபாட்டுதலம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 22, 2022, 10:31 AM IST
  • வழிபாட்டு தலம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறு
  • சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு
  • குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
வழிபாட்டுதலம் கட்டுவதில் தகராறு : இருவர் கொலை வழக்கில் தீர்ப்பு..!  title=

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர்கள்  வேதமணி மற்றும் ஆசீர்வாதம் ஆகியோர். சகோதரர்களான இவர்களுக்கு அதே பகுதியில் உறவினர்களாக வசித்து வந்தவர்கள் ஜோசப், பால் மனோகரன், வேதமாணிக்கம், ராஜமுத்து மற்றும் பூவம்மாள் ஆகியோர். இந்நிலையில் வேதமணி, ஆசீர்வாதம் மற்றும் அவர்களது உறவினர்கள் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு அங்கு தேவாலையம் ஒன்று கட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த தேவாலையம் கட்டுவதிலும், கட்டப்பட்டால் அது யாருக்கு சொந்தம் என்பதிலும் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உறவினர்களான ஜோசப், பால் மனோகரன், வேதமாணிக்கம், ராஜமுத்து மற்றும் பூவம்மாள் ஆகியோர் பயங்கர ஆயுதங்களால் வேதமணி மற்றும் ஆசீர்வாதம் ஆகிய இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர்.

மேலும் டிக்க | தூத்துக்குடி : பெற்ற தாயை கொலை செய்த 17 வயது சிறுமி!

இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஜோசப், பால் மனோகரன், வேதமாணிக்கம், ராஜமுத்து மற்றும் பூவம்மாள் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்த ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலையம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பேச்சு பொருளாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | அண்ணனுக்கு பதில் தம்பியை வெட்டிய கும்பல் - காதலித்ததால் நேர்ந்த கொடூரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

Trending News