கார் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்: கார் விலைகளில் அதிகரிப்பு

Tata Motors Price Hike: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வணிக வாகனங்களின் விலையை ஏப்ரல் 1, 2022 முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2022, 12:01 PM IST
  • ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
  • டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தப் போகிறது.
  • விலைவாசி உயர்வால் வாடிக்கையாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
கார் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்: கார் விலைகளில் அதிகரிப்பு title=

புதுடெல்லி: பணவீக்க உயர்வின் தாக்கம் தற்போது ஆட்டோமொபைல் துறையிலும் காணப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளது. 

விலைவாசி உயர்வின் தாக்கம் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். அதாவது, வாடிக்கையாளர்கள் டாடா மோட்டார்-ஸின் வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு பழைய விலைக்கு பதிலாக புதிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். 

விலை எவ்வளவு உயரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

வணிக வாகனங்களின் விலையை ஏப்ரல் 1, 2022 முதல் உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலை உயர்வு குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாகனங்களின் விலையில் 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிகரிப்பு இருக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மெர்சிடிஸ் விலையில் அதிகரிப்பைக் காரணம் காட்டி, ஏப்ரல் 1, 2022 முதல் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்துவதாக முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மலிவான அசத்தல் Maruti கார்களை வாங்கணுமா? வருகிறது சூப்பர் சான்ஸ்

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ரஷியா - உக்ரைன் போர்-தான் கார் விலை உயர்வுக்கு காரணம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாகனங்களின் விலையும் பாதிக்கப்பட்டு, அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. எஃகு, அலுமினியம் மற்றும் பிற உலோகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் வணிக வாகனங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. 

டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் மிகப்பெரிய நிறுவனமாகும்

வணிக வாகனத் துறையில் டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய நிறுவனமாகும். டாடா மோட்டார்ஸ் டாப்-3 பயணிகள் வாகன நிறுவனங்களிலும் இடம்பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த துறையிலும் நிறுவனம் தனது ஈடுபாட்டை அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க | இவையே மிகவும் மலிவான 5 அட்வென்ச்சர் பைக்குகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News