திருச்சி - சிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

திருச்சி டூ சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Last Updated : May 20, 2019, 10:05 AM IST
திருச்சி - சிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம் title=

திருச்சி டூ சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

 

 

 

Trending News