சென்னை மின்சார ரயிலில் தவறி விழுந்து 3 பேர் பலி

சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையத்தின் அருகே, மின்சார ரயிலில் சென்ற பயணிகள் 3 பேர் தவறி கீழே விழுந்து உயிர் இழந்தனர்.

Last Updated : Feb 23, 2017, 10:33 AM IST
சென்னை மின்சார ரயிலில் தவறி விழுந்து 3 பேர் பலி title=

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையத்தின் அருகே, மின்சார ரயிலில் சென்ற பயணிகள் 3 பேர் தவறி கீழே விழுந்து உயிர் இழந்தனர்.

சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அதில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பரங்கிமலை, பழவந்தாங்கல் இடையே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் ஏராளமானோர் படிக்கட்டுகளின் பயணம் செய்தனர்.

பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சில பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்நேரத்தில் பயணிகள் மின்கம்பத்தில் உரசி மோதினர். இதில் 3 பயணிகள் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து இறந்தனர். 4 பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending News