காற்றுவெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிகர்கள் பட்டாளமே இடம் பெறுகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால் புரொடெக்ஷன் எண் 17 என்று அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைகஞர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி இந்த படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படம் மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி வெளியாக தயாராக இருக்கிறது.
இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. இதில் ஜோதிகா ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.