சமஸ்கிருதத்தை விடவும் தமிழ்மொழி பழமையானது. அந்த தமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க. நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார்.
நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்க்கு கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- மோடி தலமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கையை கொண்டு வருவது முறையல்ல, இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே கொள்கை சாத்தியமல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரி உடை , உணவு முறை என்று கட்டாயப்படுத்த முடியுமா ? இது போல் இந்த கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.