காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல் என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக - அமைச்சர் ஐ. பெரியசாமி.
தமிழ்நாடு கேரளா இடைபட்ட ஐந்து இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை நிபா வைரஸ்வாதிப்பு யாருக்கும் இல்லை - அமைச்சர் மா சுப்பிரமணியன்
பொள்ளாச்சி அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளால், கரடுமுரடான பாதையை உயிர் பயத்துடனே கடந்து செல்வதாகவும் , கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து மத வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம் என காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்யப் பயன்படுத்தபட்ட 5 செல்போன்களைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுகவுக்கு 40 எம்.பிக்களைக் கொடுத்த மக்களுக்கு, மின் கட்டண உயர்வை தமிழக அரசு பரிசாக கொடுத்திருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மூன்று நாட்கள் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதால் ஜாபர் சாதிக்கிடமும், அவரது மனைவியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.