கடந்த வாரம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.
இந்தநிலையில், தனக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். அதில்:-
நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு பங்களா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை, திருச்சியில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.