மனித மூளைக்குள் சிப்... எலான் மஸ்க் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தது FDA!

மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்ள நியூராலிங்க் (Neuralink) நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 26, 2023, 12:48 PM IST
  • பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பாக மனித மூளையில் ஒரு சிப்பை பொருத்துவதற்கான நியூராலிங்கின் முயற்சியை மார்ச் மாதத்தில், FDA நிராகரித்தது.
  • FDA ஒப்புதலைப் பெற்றவுடன், மஸ்க் நியூராலிங்க் குழுவை வாழ்த்தி ட்வீட் செய்தார்.
  • மருத்துவ சோதனைக்கான ஆட்சேர்ப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
மனித மூளைக்குள் சிப்... எலான் மஸ்க் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தது FDA! title=

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின், மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கிடைத்துள்ளது. இதனை அடுத்து, எலோன் மஸ்க் விரைவில் மனித மூளையில் ஸ்மார்ட் சிப்களை பொருத்தி வராலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியைத் தொடங்கலாம். மனித மூளையில் பொருத்தப்பட்ட நியூராலிங்க் சாதனத்தின் தாக்கத்தை எலான் மஸ்க் இப்போது ஆய்வு செய்ய முடியும். "எங்கள் முதல்-மனித மருத்துவ ஆய்வைத் தொடங்க FDA இன் ஒப்புதலைப் பெற்றுள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நியூராலிங்க் ட்வீட் செய்துள்ளார்.

"இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நியூராலிங்க் குழு மேற்கொண்ட பணியின் விளைவாகும். மேலும் ஒரு நாள் எங்கள் தொழில்நுட்பம் பலருக்கு உதவிடும் வகையில் வளர்ச்சி பெறுவதற்கான ஒரு முக்கியமான முதல் படியாகும்," என்று நுயூராலிங்க் நிறுவனம் மேலும் கூறியது.

ஆராய்ச்சியில், குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்ட சிப்கள் சிறப்பாக வேலை செய்துள்ளன. சில குரங்குகள் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தியும் இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வறிக்கைகளை நியூராலிங்க் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து, அடுத்தக்கட்டமாக மனித உடலில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

மேலும் படிக்க | ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு விவகாரத்தில் எலோன் மஸ்க்கிற்கு நீதிமன்றம் சம்மன்

FDA ஒப்புதலைப் பெற்றவுடன், மஸ்க் நியூராலிங்க் குழுவை வாழ்த்தி ட்வீட் செய்தார். மேலும், மருத்துவ சோதனைக்கான ஆட்சேர்ப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில், பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பாக மனித மூளையில் ஒரு சிப்பை பொருத்துவதற்கான நியூராலிங்கின் முயற்சியை FDA நிராகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், நியூராலிங்கின் சாதனம் மனித சோதனைகளுக்குத் தயாராக இருப்பதாகவும், பன்றிகள் மற்றும் குரங்குகள் மீது பரிசோதனை செய்த பின், மனித மூளையில் பொருத்தி பரிசோதனை செய்வதை எதிர்நோக்கியிருப்பதாகவும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இருப்பினும், மூளை-கணினி இடைமுகத்தை மனிதர்களுக்குள் முதன்முதலில் பொருத்தியது Musk's Neuralink நிறுவனம் அல்ல. நியூராலிங்க் போட்டியாளரான சின்க்ரான் ( Synchron), கடந்த ஆண்டு மே மாதம் வெறும் எண்ணங்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் சாதனங்களை ஹேண்ட்ஸ் ஃப்ரீயாகக் கட்டுப்படுத்த, அமெரிக்காவில் கடுமையாக முடங்கிப்போயிருந்த ஆறு நோயாளிகளுக்கு மனித சோதனைகளைத் தொடங்கியது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட சின்க்ரான் ஒரு எண்டோவாஸ்குலர் மூளை-கணினி இன்டர்ஃபேஸ் (BCI) நிறுவனமாகும், இது நியூராலிங்குடன் போட்டியிடுகிறது. இது முடங்கியவர்கள் தங்கள் மூளை செயல்பாடுகளின் மூலம் கணினிகள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | உளவு பார்க்கும் WhatsApp... அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News