மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

Last Updated : Jun 7, 2016, 06:59 PM IST
மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் title=

மெக்சிகோ நாட்டின் தெற்கு பசுபிக் கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. 

கடலுக்கடியில் 100 கிலோ மீட்டருக்கு  மேற்பட்ட ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தெருக்களிலும் சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Trending News