கர்நாடகா: விமான கோளாரால் 12 பேர் தாமதம்: ஜி.பரமேஸ்வரா விளக்கம்!

கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா இருக்கிறார். அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்று நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. 

Last Updated : May 16, 2018, 03:23 PM IST
கர்நாடகா: விமான கோளாரால் 12 பேர் தாமதம்: ஜி.பரமேஸ்வரா விளக்கம்! title=

கர்நாடகா நேற்று வெளியா தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி(113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 

எனவே, கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா இருக்கிறார். அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்று நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. 

கர்நாடகாவில் யார் முதல்வர் ஆவார் என குழப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் வரும் மே 28 ஆம் நாள் இதற இரண்டு தொகுதிகளுக்கு (ராஜேஷ்வரி நகர், ஜெய்நகர்) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி முதல்வரை தீர்மாணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், குமாரசாமி தலைமையில் இன்று துவங்கிய மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மஜத.,வை சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. அதேபோன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 12 எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகின. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.பரமேஸ்வரா கூறும்போது..!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு, விமான கோளாரால் வர தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார்!

இதனால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார் என்று கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது!

Trending News