ஓய்வின்றி உழைக்கும் பிரதமர் மோடி; ராஜ்நாத் சிங் புகழாரம்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓய்வின்றி உழைத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 9, 2019, 08:28 AM IST
ஓய்வின்றி உழைக்கும் பிரதமர் மோடி; ராஜ்நாத் சிங் புகழாரம்! title=

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓய்வின்றி உழைத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!

மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தின் சிறப்புகள் குறித்தும் அவர்கள் பரப்பி வருகின்றனர். இதற்காக முக்கிய மந்திரிகளிடம் தகவல்கள் கேட்டு பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் சாதனை மலர் தயாராகி வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டபிரிவு 370 மற்றும் 35A-வினை திரும்ப பெற்றல், ஆதார் வழியாக மக்கள் நலத் திட்டங்கள், முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது ஆகியவை முக்கிய சாதனைகளாக இதில் இடம்பெறுகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவிக்கையில்.,  "இரண்டாவது முறையாக பதவியேற்ற நாள் முதல்  பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும், பதவியேற்ற 100 நாட்களில் மோடி அரசு செய்துள்ள பணிகள் யாருடனும் ஒப்பிட முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

Trending News