குட்கா விவகாரம்: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது!

சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்!  

Last Updated : Apr 27, 2018, 10:21 AM IST
குட்கா விவகாரம்: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது! title=

10:15 27-04-2018

சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர். 

 


குட்கா விவகாரத்தில் தொடர்பு இருப்பதால் டிஜிபி ராஜேந்திரனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, டிஜிபி அலுவலகம் மற்றும் மெரினாவில் திடீரென ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Trending News