டெல்லி பள்ளியில் பியூனால் 5_வயது குழந்தை பாலியல் பலாத்காரம்

Last Updated : Sep 10, 2017, 10:57 AM IST
டெல்லி பள்ளியில் பியூனால் 5_வயது குழந்தை பாலியல் பலாத்காரம் title=

குர்கிராம் மாவட்டத்தி ரியான் சர்வதேச பள்ளியில் 2-வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள தாகூர் ஃபப்ளிக் பள்ளியில் படிக்கும்  5-வயது பெண்ணை அந்த பள்ளியின் பியூன் விகாஸ் கற்பழித்து உள்ளான். 

வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது.இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். 

பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி விகாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News